ulagam oru - s. p. balasubrahmanyam lyrics
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை
ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை
கடல் நிலமாகும் நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை
உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்
வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்
என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
Random Song Lyrics :
- follow - imaginary future lyrics
- barba negra - tito y su torbellino lyrics
- camino - elenco de soy luna lyrics
- never wrong - tremonti lyrics
- far side of the moon - tinashe lyrics
- lignes de fuite - bluegram lyrics
- как коби - yung fim lyrics
- valonarkaa - annika eklund lyrics
- sway in the morning freestyle (0 to 100) - kwesta lyrics
- auf entzug: pt. 2 - jaspa lyrics